Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாய் இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட 12 வயது சிறுமி

தாய் இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட 12 வயது சிறுமி
, வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (16:16 IST)
தன்னுடைய தாய் மார்பக புற்று நோயால் இறந்ததால் 12 வயது பள்ளி சிறுமி  மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

நார்விச்சில் உள்ள  இசபெல் ஆன் ரிச்சர்ட்சன் என்ற இந்த 12 வயது சிறுமி நான்கு வருடத்திற்கு முன் மார்பக புற்று நோயால் இறந்து போன தன்னுடைய தாய் கரினா பற்றிய கவலையில் இருந்துள்ளார். இது குறித்து தான் பயிலும் பள்ளி செவிலியரிடம் ஆலோசனை பெற்றுள்ளார். ஆனால் இசபெல் மனநல ஆலோசகருடன் தன்னுடைய சோகம் குறித்து ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்றும் மற்றும் தன்னுடைய படுக்கையறையில் இந்த வருடம் மே மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் எனவும் அவளின் ஆரம்ப பள்ளி மாணவர் கூறினர்.

விசாரணையின் போது இசபெல் ஒரு மகிழ்ச்சியான குறும்புத்தனமான பெண் எனவும் தன்னுடைய தாய் இறந்த பின் அவள் மிகவும் நலிவடைந்ததாகவும் இதனால் தனக்கு யாரும் இல்லை என அவள் கவலையடைந்ததாக இசபெல்லின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தர்.

இசபெல் தான் இறக்கும் முன் தன்னுடைய தற்கொலை புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். இதன் மூலமே அவளின் தந்தை ஸ்டீபன், அவள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil