Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதிமூன்று வயது சிறுமியை ஒரு வருடமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2015 (18:09 IST)
எழாம் வகுப்பு மாணவியை ஒரு வருடமாக மிரட்டி ஒரு பள்ளி ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கர்நாடகாவில் கொப்பல் மாவட்டத்தில் எலபூர்கா டவுன் பகுதியில் இயங்கும் அரசு பள்ளியில் பணியாற்றி வருபவர் நிங்கோஜி(43). இவர் இதே பள்ளியில் எழாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணைவியை ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி யாரிடமாவது கூறினால் தேர்வில் பெயிலாக்கி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
 
அதற்கு பயந்து அந்த சிறுமி இது பற்றி தனது தோழிகளிடமோ அல்லது பெற்றோர்களிடமோ கூறவில்லை. 
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது அந்த ஆசிரியர் செய்த பாலியல் பலாத்காரம் பற்றி தனது பெற்றோர்களிடம் கூறினாள். இது கேட்டு அதிர்ச்சியடைந்த அவளது பெற்றோர்கள், இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
 
சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்த காவல்துறை, இதுபற்றி அவரிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.  

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்