Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவனுடன் உடலுறவு கொண்ட ஆசிரியைக்கு 17 ஆண்டுகள் சிறை

Webdunia
செவ்வாய், 25 நவம்பர் 2014 (13:18 IST)
அமெரிக்காவை சேர்ந்த லிண்டா ஹார்டன் என்ற ஆசிரியை, 16 வயது மாணவனுடன் உடலுறவில் ஈடுபட்டதற்காக அவருக்கு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
 
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள மான்செஸ்டர் உயர் நிலைப்பள்ளியில் 21 வயதுடைய லிண்டா ஹார்டன் என்ற பெண், அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
 
இவர் அதே பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவரைக் கடந்த 20ஆம் தேதி அழைத்துச் சென்று,  நிறுத்தப்பட்ட கார் ஒன்றில் உடலுறவு கொண்டுள்ளார்.
 
இது, பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிய வந்ததையடுத்து, இவர் மீது காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், லிண்டா ஹார்டனைக் கைது செய்தனர்.
 
பின்னர், இவர் கடந்த 22ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இவருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 2,50,000 டாலர்கள் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!