Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்திய சவுதி

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (13:13 IST)
இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவை தாக்குவதற்காக ஹவுத்தி புரட்சியாளர்கள் அனுப்பிய ஏவுகணைகளை வானிலேயே சுட்டு சிதறடித்தது சவுதி.
 
ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு யுத்தத்தில் அரசாங்கத்துக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். இதில் ஏமன் அரசாங்கத்துக்கு சவுதி அரேபியா ஆயுத உதவிகள் செய்து வருகிறது. அதே போல ஈரான் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு உதவி வருகிறது. சமீபத்தில் சவுதிக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைனை ஹவுத்தி புரட்சியாளர்கள் தாக்க, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவுதி விமானப்படை புரட்சியாளர்களை ஏவுகணைகள் கொண்டு தாக்கியது. இதில் கடுப்பான கிளர்ச்சியாளர்கள் புனித் தலமான மெக்காவை குறி வைத்து ஏவுகணைகளை அனுப்பியுள்ளனர். அதை வானிலேயே தாக்கி அழித்தது சவுதி. 
 
இஸ்லாமியர்களின் புனித தலத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது சவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments