Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா: தனி மருத்துவமனை ஒதுக்கீடு

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (07:58 IST)
சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் உள்பட பல விவிஐபிக்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சவுதி அரேபிய மன்னர் குடும்பத்தை சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபிய மன்னர் சல்மான் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களும் இந்த 150 பேர்களில் ஒருவர் என்பது அதிர்ச்சியான தகவல் ஆகும்
 
இதனை அடுத்து சவுதி அரேபிய மன்னர் குடும்பத்திற்காக உயர்தர சிகிச்சை அளிக்கக் கூடிய தனி மருத்துவமனை ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த மருத்துவமனையில் 500 பேர் சிகிச்சை அளிக்கும் வகையில் வசதி இருந்தபோதிலும் மன்னர் குடும்பத்தை சேர்ந்த 150 பேர்களுக்கு மட்டுமே தனியாக இந்த மருத்துவமனை ஒதுக்கி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
மேலும் மன்னர் குடும்பத்தை சேர்ந்த 150 பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் வட்டாரங்கள் கூறுகின்றன. சவுதி அரேபியாவில் ஏற்கனவே கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3000 ஆக உள்ளது என்பதும் இதுவரை கொரோனா வைரஸுக்கு 44 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் மெக்கா மதினா போன்ற புனிதத் தலங்கள் மூடப்பட்டுள்ளதால் முதல் முறையாக ஹஜ் புனித யாத்திரையும் நடக்குமா என்ற கேள்விக் குறியாக உள்ளது. இந்த நிலையில் சவுதி அரேபிய மன்னர் குடும்பத்தினர் 150 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள செய்தியால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments