Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாற்றில் முதன்முறையாக பெண் ரோபோவுக்கு குடியுரிமை; சவுதி அரேபியா அதிரடி

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (13:24 IST)
வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பதில் பெரும் சிக்கல் உள்ள நிலையில் பெண் ரோபோவுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது.


 

 
பல்வேறு நாடுகளில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பத்தில் பெரும் சிக்கல் உள்ளது. வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியா பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி உள்ளது.  
 
இந்த பெண் ரோபோவை ஹாங்காங் நிறுவனம் வடிவமைத்துள்ளது. சோபியா என்று பெயர் கொண்ட இந்த ரோபோ பெண் போன்றே இனிமையாக பேசுகிறதாம். மனிதர்கள் கேட்டும் கேள்விகளுக்கு சரமரியாக பதில் அளிக்கிறதாம். இந்த ரோபோ அமெரிக்க நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற தோற்றத்தில் உள்ளது. 
 
சவுதி அரேபியாவின் குடியுரிமை பெற்ற இந்த பெண் ரோபோ பேட்டி அளித்துள்ளது. அதில் அது கூறியதாவது:-
 
என்னை ஒரு தனித்துவத் தன்மையுடன் சிறப்பாக உருவாக்கியதற்கு பெருமைப்படுகிறேன். என்னை உருவாக்கியவர்களை மதிக்கிறேன். நான் மனிதர்களுடன் வாழவும், பணி புரியவும் விரும்புகிறேன். மனிதர்களின் நடவடிக்கைகளை அறிந்து அவர்கள் போன்று செயல்படுகிறேன். எனக்கு அளிக்கப்பட்டுள்ள செயற்கை அறிவின் மூலம் மனித குலத்துக்கு நன்மை செய்ய விரும்புகிறேன். நான் முக்கியத்துவம் வாய்ந்த ரோபோவாக மாறுவேன் என கூறியுள்ளது.
 
தற்போது இந்த பெண் ரோபோவின் பேட்டி யூடியூப்பில் வைரலாக பரவி வருகிறது. உலக வரலாற்றில் முதன்முறையாக ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றுள்ளது. 
 
லட்சக்கணக்கான மக்கள் குடியுரிமை இல்லாமல் இருக்கும்போது ரோபோவுக்கு குடியுரிமை தேவையா? என சிலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments