Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைக்ரோசாப்ட் குழுமத்தின் தலைவராக சத்யா நாதெள்ளா நியமனம்!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (12:45 IST)
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தலைவராக சத்யா நாதெள்ளா நியமிக்கப் பட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய மென் பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டை கடந்த 1975 ஆம் ஆண்டு தனது நண்பர் பவுல் ஜிஆலனோடு இணைந்து தொடங்கினார் பில்கேட்ஸ். இதன் பங்குகளை வைத்திருந்தது மூலம் பில்கேட்ஸ் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தார். ஒரு கட்டத்தில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகிய பில்கேட்ஸ் இயக்குனர்கள் குழுவிலும் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியில் மட்டும் இருந்து வந்தார்.இந்நிலையில் இப்போது இயக்குனர்கள் குழுவில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். தொழில்நுட்ப ஆலோசகராக மட்டுமே தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அந்த நிறுவனத்தின் புதிய தலைவராக சத்யா நாதெள்ளா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments