Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (14:32 IST)
செவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி ஒன்று இருப்பதாக இத்தாலி ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா? மனிதர்கள் உயிர்வாழும் சூழல் உள்ளதா? எனக் கண்டறிய நாசாவால் தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. மேலும் இதுதொடர்பான ஆராய்ச்சிக்காக நாசா அனுப்பிய ரோவர் ரோபோ விண்கலம் அண்மையில் செவ்வாயில் ஏற்பட்ட புயலால் சேதமடைந்து  கட்டுப்பாட்டை இழந்தது.
 
நிலையில் இத்தாலிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ''மார்சிஸ்'' எனும் தொலைநோக்கியின் உதவியுடன் நடந்தப்பட்ட ஆய்வில் செவ்வாயில் உப்பு நீர் ஏரி இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தினுள் ஆழ்ந்த இடத்தில் இருப்பதால் அந்தத் தண்ணீர் உப்பு நீராக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
 
இத்தாலி ஆராய்ச்சியாளர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து 2 ஆயிரத்து 20ஆம் ஆண்டு புதிய ரோவர் ஒன்றை அனுப்பி குறிப்பிட்ட உப்பு நீர் ஏரியை ஆய்வு செய்ய நாசா முடிவு செய்துள்ளது. மேலும் குறிப்பிட்ட நீரில் ஏதேனும் உயிரினங்கள் உள்ளனவா என்றும், ஆய்வு செய்ய நாசா திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments