Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மளிகைக்கடையில் துப்பாக்கி குண்டுகள் விற்பனை.. இயந்திரத்தை அறிமுகம் செய்த அமெரிக்க அரசு..!

Siva
செவ்வாய், 9 ஜூலை 2024 (13:45 IST)
துப்பாக்கிக்கு தேவையான குண்டுகளை இனிய மளிகை கடையில் உள்ள இயந்திரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவில் ஏற்கனவே துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து உள்ளது என்பதும் பள்ளிகள் உள்பட பல இடங்களில் மர்ம நபர்கள் திடீர் திடீர் என துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் துப்பாக்கிக்கு தேவையான குண்டுகளை இனிமேல் இயந்திரம் பெற்றுக் கொள்ளலாம் என்றும், ஏடிஎம் எந்திரத்தில் எப்படி பணம் வருகிறதோ அதேபோல் இந்த இயந்திரத்தில் துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் என்றும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. 
 
துப்பாக்கி லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து உரிய பணம் செலுத்தினால் இந்த இயந்திரத்தின் மூலம் தேவையான குண்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முதல் கட்டமாக இந்த இயந்திரம் அலபாமா, டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இயந்திரத்துக்கு கிடைக்கும் வரவேற்பை குறித்து அமெரிக்காவின் பல இடங்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4வது மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கணவர்.. பெங்களூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொள்ளுங்கள்: சசிகாந்துக்கு ராகுல் காந்தி அறிவுரை..!

இந்திய தாயின் வீரம் நிறைந்த மகன்.. பூலித்தேவர் குறித்து ஆளுனர் ரவி பெருமிதம்..!

இந்தியா, ரஷ்யா இருதரப்பு பேச்சுவார்த்தை.. ஒரே காரில் சென்ற மோடி - புதின்..!

பாகிஸ்தான் பிரதமர் பகல்காம் தீவிரவாத தாக்குதலை பிரதமர் மோடி.. சீனாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments