Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்ஃபி மோகம்: கேமாராவிற்கு பதிலாக துப்பாக்கியை அழுத்திய இளம்பெண்

செல்ஃபி மோகம்: கேமாராவிற்கு பதிலாக துப்பாக்கியை அழுத்திய இளம்பெண்
, சனி, 23 மே 2015 (21:47 IST)
செல்ஃபி எடுக்கும்போது கேமாராவிற்கு பதிலாக துப்பாக்கியை விசையை அழுத்திய இளம்பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அமெரிக்காவின் மெக்சிகோவில் ரஷ்ய இளம்பெண் (21) ஒருவர்  துப்பாக்கியால் தன்னை தானே தலையில் சுட்டுக் கொள்வது போன்ற புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளார். அதற்காக தனது அலுவலகத்தில் பணிபுரியும் பாதுகாவலரின் துப்பாக்கியை மறைத்து எடுத்து வந்துள்ளார்.
 
அதனை தனது தலையில் குறி வைத்துக் கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் கேமராவை அழுத்துவதற்கு பதிலாக, அவர் துப்பாக்கியின் விசையை அழுத்தியுள்ளார். இதனால் துப்பாக்கி குண்டு வெடித்து அவரது தலையில் பாய்ந்தது.
 
இதில் அந்த இளம்பெண் படுகாயமடைந்துள்ளார். உடனே ஆபத்தான நிலையில் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் உடன் பணிபுரிபவர்கள் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். காவல் துறையினர் அவரது கைக்கு துப்பாக்கி எவ்வாறு போனது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil