Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென பிறந்த குழந்தை; பெற்றோருக்கு பயந்து சிறுமி செய்த செயல்! – ரஷ்யாவில் கொடூரம்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (11:59 IST)
ரஷ்யாவில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில் அதை மறைக்க ஃப்ரீசரில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருக்கு தெரியாமலே கர்ப்பமாகியுள்ளார். இது தொடர்பாக அக்கம்பக்கதினருக்கு சந்தேகம் வர அதை சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியின் எடை கூடுவது தற்செயல் என நினைத்து விட்டுவிட்டார்கள்.

இந்நிலையில் வீட்டில் இருந்தபடியே குழந்தை பெற்றுள்ளார் அந்த சிறுமி. அதை பெற்றோருக்கு தெரியாமல் மறைக்க பிளாஸ்டிக் கவரில் சுற்றி ப்ரீசரில் வைத்துள்ளார். ஆனால் சிறுமிக்கு ரத்தக்கறை ஏற்பட்டுள்ளதை கவனித்த பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமி தனக்கு குழந்தை பிறந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

உடனடியாக சென்று ஃப்ரீசரில் இருந்த குழந்தையை மீட்டுள்ளார்கள். ஆனால் அதற்குள் துரதிர்ஷ்டவசமாக குழந்தை இறந்து விட்டிருந்துள்ளது. இதை தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments