Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் போர் பதற்றம்; ராணுவத்தை திரும்ப பெற்றதாக ரஷ்யா தகவல்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (15:26 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ள நிலையில் தங்கள் படையை திரும்ப பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை திரட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உக்ரைனில் உள்ள தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை திரும்ப வருமாறு அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் சிலர் மீண்டும் முகாம் திரும்பியுள்ளதாக ரஷ்யா செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments