Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மக்களை கொன்ற ரஷ்யருக்கு சிறை..! – தானே முன்வந்து தண்டனையை ஏற்ற வீரர்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (17:22 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைனியர்களை கொன்றதற்காக ரஷ்ய வீரர் ஒருவர் தண்டனையை ஏற்றுக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைய இருந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடர்ந்தது. கடந்த சில மாதங்களாகவே இந்த போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.

உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ரஷ்யா – உக்ரைன் இடையே தீவிரமான போர் நடந்து வருகிறது. இந்நிலையில் போரால் இருதரப்பு ராணுவ வீரர்களுமே தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.

சமீபத்தில் உக்ரைனை சேர்ந்த நிராயுதபாணியான மூதாட்டி ஒருவரையும், வடகிழக்கு சுமி கிராமத்தை சேர்ந்த ஒருவரையும் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக ரஷ்ய வீரர் ஒருவரை உக்ரைன் கைது செய்தது. அவர் மீது உக்ரைன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த ரஷ்ய வீரர் வாடிம் ஷிஷிமரின், மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே கொலை செய்ததாகவும், எந்த தண்டனையையும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அவரது வழக்கை விசாரித்த உக்ரைன் நீதிமன்றம் அவருக்கு போர் குற்றங்களுக்கான முதல் குற்றவாளியாக அறிவித்து வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments