Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரினாவுக்காக ரஷ்யாவில் புதிய ரயில் நிலையம்....

Webdunia
ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (14:20 IST)
14 வயது பள்ளி மாணவி மற்றும் அவரது பாட்டிக்காக வடமேற்கு ரஷ்யாவில் ஒரு புதிய ரயில் நிறுத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கரினா கோஸ்லோவா என்ற சிறுமி பள்ளிக்கு சென்றுவர இந்த முடிவை எடுத்துள்ளனர். 
 
சிறுமி கரினா கோஸ்லோவாவின் பாட்டி நடாலியா கோஸ்லோவா ஒரு முன்னாள் நர்சரி பள்ளி ஆசிரியை. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் - முர்மான்ஸ்க் ரயில் பாதை, தொலைதூர போயாகோண்டா கிராமத்திற்கு சேவையை தொடங்கவுள்ளது. 
 
ரயில்வே ஊழியர்களை ஏற்றிக்கொள்ளவும், அவர்களை இறங்கிட மட்டுமே முன்பு இங்கு ரயில்கள் நின்றன. இதற்காக நிற்கும் ரயில்களை விட்டால், இவர்களுக்கு வேறு ரயில் இல்லை. 
 
இதனால் போயாகோண்டா கிராமத்தில் புதிய ரயில் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. போயாகோண்டா கிராமத்தில், 50-க்கும் குறைவான குடும்பத்தினரே வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்லும் ஒரே மாணவி கரினா மட்டுமே.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments