Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மீது ரஷ்யா குண்டு மழை

Webdunia
புதன், 4 நவம்பர் 2015 (18:10 IST)
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்கள் தங்களின் தலைநகராக அறிவித்த ராக்கா நகரம் மீது நேற்று ரஷ்யா மற்றும் சிரியா விமான படைகள் இடைவிடாது குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியது.
 
இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் அரண்கள், பதுங்கு குழிகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டன. 30க்கும் அதிகமான தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் பலியானதாக கூறப்படுகிறது. அங்குள்ள மருத்துவமனை தவிர அனைத்து இடங்களிலும் குண்டு வீச்சு நடந்ததாக கூறப்படுகிறது. தாக்குதலில் பலியானவர்களில் பலர் அப்பாவி பொதுமக்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தீவிரவாதிகளின் தலைநகரில் நடந்த இந்த தக்குதல் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட புராதன நகரான பால்மைராவின் அருகில் இந்த வான்வழி தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

Show comments