Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மீது ரஷ்யா 17 முறை குண்டு வீசித் தாக்குதல்.. .3 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (21:51 IST)
உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் போரிட்டு வருகிறது. போர் தொடுத்து ஓராண்டிற்கு மேல் ஆகியுள்ள நிலையில் இதுவரை இரு நாடுகள் இடையே சமாதான உடன்படிக்கை ஏற்படவில்லை.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் ஆதரவளித்து, நிதியுதவியும், ஆயுதத் தளவாடங்களும் அளித்து வருகின்றனர்.

இதனால், உக்ரைன், ரஷியாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஜி7  உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தன.

இந்த நிலையில்,  கடந்த 2 நாட்களாக உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று அதிகாலையில் தொடர்ந்து 17 முறை குண்டுகள் வீசியது.

இத்தாக்குதலில் 2 குழந்தைகள்  உள்பட 3 பேர் இறந்தனர். இதில், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், கட்டிடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பலவும் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments