Webdunia - Bharat's app for daily news and videos

Install App

675 பேரை நரபலி கொடுத்த மத போதகர்!

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (15:48 IST)
ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த மத போதகர் ஒருவர் மத சடங்குகளுக்காக இதுவரை 675 பேரை நரபலி கொடுத்துள்ளதாக வெளிப்படையாக கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆப்பிரிக்க நாடான கானாவில் மத போதகர் ஒருவர் மத சடங்குகளுக்காக பலரை நரபலி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். நரபலிக்காக சாத்தான் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உதவியதாக தெரிவித்துள்ளார். 
 
அவர் வெளியிட்ட வீடியோவில், முகமூடி அணிந்து பேசியுள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக சாத்தானுடன் வாழ்வதாக தெரிவித்துள்ளார். அதோடு, மத சடங்குகளுக்காக 675 பேரை கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 
 
அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை எதுவும் நடைபெற்றுள்ளதா என்பதை அவர் குறிப்பிடவில்லை.  
 
இந்த சம்பவம் கானாவில் எந்த பகுதியில் நடைபெற்றது, எப்போது நடைபெற்றது உள்ளிட்ட தகவல்களை வெளியிட மறுத்துள்ளார். மேலும், நான் தீய சக்தியுடன் பிறந்தவர் எனவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments