675 பேரை நரபலி கொடுத்த மத போதகர்!

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (15:48 IST)
ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த மத போதகர் ஒருவர் மத சடங்குகளுக்காக இதுவரை 675 பேரை நரபலி கொடுத்துள்ளதாக வெளிப்படையாக கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆப்பிரிக்க நாடான கானாவில் மத போதகர் ஒருவர் மத சடங்குகளுக்காக பலரை நரபலி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். நரபலிக்காக சாத்தான் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உதவியதாக தெரிவித்துள்ளார். 
 
அவர் வெளியிட்ட வீடியோவில், முகமூடி அணிந்து பேசியுள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக சாத்தானுடன் வாழ்வதாக தெரிவித்துள்ளார். அதோடு, மத சடங்குகளுக்காக 675 பேரை கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 
 
அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை எதுவும் நடைபெற்றுள்ளதா என்பதை அவர் குறிப்பிடவில்லை.  
 
இந்த சம்பவம் கானாவில் எந்த பகுதியில் நடைபெற்றது, எப்போது நடைபெற்றது உள்ளிட்ட தகவல்களை வெளியிட மறுத்துள்ளார். மேலும், நான் தீய சக்தியுடன் பிறந்தவர் எனவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments