Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது ராஜபக்சே அரசு!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (12:59 IST)
103 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என்பதால் இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது மகிந்த ராஜபக்சே அரசு. 

 
இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் ஆளும் ராஜபக்‌ஷே அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு வீதிகளில் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று ராஜபக்‌ஷே தவிர்த்து பிற அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிய நிலையில் புதிய அமைச்சர்கள் பதவி நியமனம் செய்யப்பட்டனர்.
 
தொடர்ந்து இலங்கை அரசியல் சூழல் ஸ்திரத்தன்மையற்று போயுள்ள நிலையில் ராஜபக்‌ஷே அரசுக்கு ஆதரவளித்து வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. இதனால் இலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு நிலவி வருகிறது.
 
இந்நிலையில் இலங்கையில் ஆளும் எஸ்.எல்.பி.பி. கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. இலங்கையில் 40-க்கும் மேற்பட்ட ஆளும், கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தனித்து செயல்பட முடிவெடுத்துள்ளனர். 225 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 113 பேர் ஆதரவு தேவைப்படும் நிலையில் 103 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என்பதால் இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது மகிந்த ராஜபக்சே அரசு. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகள் செயல்பட்ட வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!

திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது ஒத்திவைப்பதாகவும் இது தொடர்பாக முதல்வரையும், செய்திதுறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன்- இயக்குனரும் நடிகருமான ரஞ்சித்!

கள்ள உறவை கைவிட மறுத்த மனைவி! ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை.. பரபரப்பு தகவல்..!

தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையில் திடீர் வீழ்ச்சி.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments