Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய அதிபர் புதின் விரைவில் கொல்லப்படுவார்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சால் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (11:13 IST)
ரஷ்ய அதிபர் புதின் அவரது நெருங்கிய வட்டாரங்களால் கொல்லப்படுவார் என உக்ரைன்  அதிபர் ஜெலன்ஸ்கி  பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து உள்ளது என்பதும் உக்ரைன் நாட்டின் பல பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் ரஷ்யா கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகள் உதவி செய்த போதிலும் உக்ரைன் நாட்டில் பெரும் சேதம் தான் ஏற்பட்டுள்ளது. மேலும் ரஷ்யா வீரர்களை உக்ரைன் வீரர்கள் விரட்ட முடியாத நிலைதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைன் வருகை தந்து உக்ரைன் நாட்டிற்கு தேவையான ஆயுதங்கள் வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா அதிபர் புதின் அவரது நெருங்கிய வட்டாரத்தினால் கொல்லப்படுவார் என்று தெரிவித்துள்ளார். 
 
உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய அதிபர் புதினின் நெருக்கமான வட்டாரங்களில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கொல்லப்படும் நிகழ்வு நிச்சயம் நடக்கும் என்றும் ஆனால் எப்போது என்பது எனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபரின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments