Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் விரைவில் அதிபர் தேர்தல்..! தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்..!

Senthil Velan
வியாழன், 9 மே 2024 (15:20 IST)
இலங்கையில் வரும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.  வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்ததால்  இலங்கை மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

இதை அடுத்து இலங்கை அரசுக்கு எதிராக மிகப்பெரிய புரட்சி வெடித்தது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். 

ALSO READ: ஹரியாணா பாஜக அரசுக்கு நெருக்கடி..! வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு பறந்த கடிதம்
 
இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 17ம் தேதி துவங்கி, அக்டோபர் 16ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியை அடக்கம் செய்யும் போது கணவர் மறைவு.. 55 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தம்பதி..!

12ஆம் வகுப்பு மாணவர்களின் நலனுக்காகவே 11ஆம் பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் அன்பில் மகேஷ்

மெட்டாவுடன் தமிழக அரசு முக்கிய ஒப்பந்தம்: இனி வாட்ஸ்-ஆப் மூலமே அரசு சேவை..!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்.. புளித்துப் போன நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம்! அன்புமணி

பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. வரவேற்று பேசிய நயினார் நாகேந்திரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments