Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளை மாளிகையை காலி பண்ண மாட்டேன்! – அடம்பிடிக்கும் ட்ரம்ப்!

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (11:16 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதை ஏற்றுக்கொள்ளாமல் நடப்பு அதிபர் ட்ரம்ப் விடாபிடியாய் இருந்து வருவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் வெளியானது. அதில் நடப்பு அதிபர் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜனநாயக கட்சியினர் பதவியேற்பு பணிகளுக்கு ஒருபுறம் தயாராகி வரும் நிலையில் மறுபுறம் ட்ரம்ப் இந்த வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

இந்நிலையில் ஜோ பிடன் எதிர்வரும் ஜனவரியில் பொறுப்பேற்க உள்ள நிலையில் நடப்பு அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதிபர் ட்ரம்ப் “ஜோ பிடன் தனது வெற்றியை நிரூபிக்காதவரை நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மாட்டேன்” என கூறியுள்ளார். இதனால் அமெரிக்க அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான், ப்ளிப்கார்ட் கிடங்குகளில் ரெய்டு! கோடிக்கணக்கில் சிக்கிய போலி தயாரிப்புகள்?

அவுரங்கசீப் கல்லறையை இடித்தால் ரூ.23 லட்சம் பரிசு.. இந்து அமைப்பு அதிர்ச்சி அறிவிப்பு..!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்.. 100 பேர் பலி..!

முதல்முறையாக ரூ.66,000ஐ தொட்டது தங்கம் விலை.. இன்னும் உயருமா?

முதல்வர் வீட்டுக்கு அண்ணாமலை வரட்டும், என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்: அமைச்சர் ரகுபதி

அடுத்த கட்டுரையில்
Show comments