Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவானில் விமானத்தில் பிறந்த பெண் குழந்தை.. அவசரமாக தரையிறக்கி முதலுதவி..!

Siva
செவ்வாய், 12 மார்ச் 2024 (09:19 IST)
நடுவானில் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி வந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் இதனை அடுத்து அந்த பெண்ணுக்கும் அவருடைய குழந்தைக்கும் முதலுதவி  செய்ய உடனடியாக அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்டன் என்ற பகுதியில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென நடுவானில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அடுத்து விமானத்தில் இருந்த பயணி ஒருவர் டாக்டர் என்பதால் அவருடைய உதவியுடன் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இந்த பிரசவத்திற்கு விமான பணி பெண்களும் உதவி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தை பிறந்ததும் இருவருக்கும் உடனடியாக முதல் உதவி செய்ய வேண்டும் என்பதால் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்க மருத்துவர் கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து அருகில் உள்ள விமான நிலையத்தில் அனுமதி பெற்று உடனடியாக விமானம் இறக்கப்பட்டு, அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
நடுவானில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments