Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Webdunia
சனி, 26 டிசம்பர் 2015 (07:26 IST)
பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பல இடங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.


 

 
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் 6.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 
 
இது குறித்து பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சி துறையின் இயக்குனர் ஜெனரல் குலாம் ரசூல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் 196 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.
 
லாகூர், செய்குபுரா, நன்கனா எஸ்சாகிப், பைசலாபாத், சர்கோதா, செய்குபுரா முல்தான், சக்வால். லோத்ரன்,சியல்கோட், முரீ, பெஷாவர், மலாகண்ட், சர்சடா, மன்சக்ரா, ஸ்வாட், மற்றும் தெற்கு வஜீரிஸ்தான் என்று பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது." என்றார்.
 
இந்த நில நடுக்கம் ஆப்கானிஸ்தானின் வடபகுதியிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். உயிர் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

Show comments