பிரதமர் பதவியை இழக்கமாட்டேன் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உறுதிபடக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நாட்டின் அமைதியைக் கெடுத்துள்ளது.
எதிர்ப்பு எண்ணம் கொண்ட சில ஆயிரம் மக்களுக்காக மில்லியன் கணக்கான மக்களின் அதிகாரத்தை இழக்க முடியாது பாகிஸ்தான் அரசு ஏற்கனவே எதிர்ப்பாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது.
பாகிஸ்தானின் தேசிய சபை ஜனநாயகத்தை காக்க ஒரு தீர்மானம் எடுத்துள்ளது. எதிர்ப்பாளர்களின் ஜனநாயகத்துக்கு எதிரான எந்த திட்டத்தையும் நான் அனுமதிக்க மாட்டேன்“ என்று நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.