Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்போனில் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு உயிரை விட்ட தம்பதி

செல்போனில் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு உயிரை விட்ட தம்பதி
, புதன், 13 ஆகஸ்ட் 2014 (17:27 IST)
போர்ச்சுகலில் மலை உச்சியிலிருந்து செல்ஃபி எடுத்துக் கொள்ள முயற்சித்த போலந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியர் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
போர்ச்சுகலில் உள்ள கபோ டி ரோகா மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போலந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியர், தங்களை தாங்களே செல்போனில் புகைப்படம் (செல்ஃபி) எடுத்துக்கொள்ள முயற்சித்தனர். அப்போது இருவரும் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் கடந்த திங்கள்கிழமை மீட்கப்பட்டன.
 
இருவரும் தவறி விழுந்தபோது அவர்களின் இரு குழந்தைகளும் உடனிருந்துள்ளனர். குழந்தைகள் இருவரும் பாதுகாப்பாக உள்ளனர். மலையின் உச்சியில் பாதுகாப்பு தடுப்புகளை சுற்றுலாத்துறை அதிகாரிகள் அமைத்துள்ளனர். ஆனால், அந்த தடுப்பையும் தாண்டிச் சென்று புகைப்படம் எடுக்க முயன்றபோதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil