Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விசாரணைக்குச் சென்ற கோத்தபாயவுக்கு சல்யூட் அடித்த போலீஸ் அதிகாரி்யால் இலங்கையில் சர்ச்சை

விசாரணைக்குச் சென்ற கோத்தபாயவுக்கு சல்யூட் அடித்த போலீஸ் அதிகாரி்யால் இலங்கையில் சர்ச்சை
, சனி, 29 ஆகஸ்ட் 2015 (14:26 IST)
விசாரணைக்குச் சென்ற முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், மகேந்திரா ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்சேவிற்கு இலங்கை போலீஸ் அதிகாரி ஒருவர் சல்யூட் அடித்து மரியாதை செய்துள்ளார். இந்த விவகாரம் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது சுமத்தபட்டுள்ள பல ஊழல் குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை செய்து வருகிறது . இந்நிலையில் கோத்தபாய கடந்த 24 ஆம் தேதி திங்கட்கிழமையன்று  சாட்சியமளிக்க சென்றிருந்தார். அப்பொழுது அவருக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து கொழும்பு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் கோத்தபாய கூறும்போது, இது ஒரு சாதரணா விஷயம் என கூறினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil