Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் ஓட்டும் பெண்களுக்கு பூ கொடுத்து பாராட்டும் போலீஸார்

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2018 (09:52 IST)
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை நீக்கப்பட்டதையடுத்து, கார் ஓட்டும் பெண்களை வரவேற்கும் விதமாக போலீசார் அவர்களுக்கு ரோஜா பூ வழங்கினர். 
சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகன் முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது மாற்றங்கள் சில பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளது.
 
இதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் முறைப்படி உரிமம் பெற்று கார் ஓட்டலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இதனையடுத்து சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் கடந்த ஞாயிற்றிக் கிழமை முதல் பெண்கள் கார் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
இந்நிலையில் சவுதியில் கார் ஓட்டும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் சவுதி போலீஸார் கார் ஓட்டும் பெண்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் வண்டியை பாதுகாப்புடன் ஓட்டும்படி அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments