பிரான்சில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்; பிரதமர் மோடி எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (10:41 IST)
பிரான்சில் கடந்த சில தினங்கள் முன்னதாக ஆசிரியர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது சர்ச் ஒன்றில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் முகமது நபியை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்த கார்ட்டூனை வைத்து பாடம் நடத்தியதாக ஆசிரியர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சில நாட்கள் முன்னதாக பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பத்தின் போது ஆசிரியரை கொன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் நபிகளை தவறாக சித்தரித்ததற்கு பிரான்ஸ் மீது ஈரான், துருக்கு உள்ளிட்ட நாடுகளில் இருந்து எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

இந்நிலையில் நேற்று பிரான்ஸில் உள்ள நைஸ் தேவாலயத்திற்குள் நுழைந்த பயங்கராவதி ஒருவன் அங்கிருந்த மக்களை சரமாரியாக தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பிரான்ஸில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திகு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ள மோடி “பயங்கரவாதிகளை ஒழிப்பதில் இந்தியா பிரான்ஸுக்கு ஆதரவாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments