அமெரிக்காவில் பறந்து கொண்டிருந்த இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
அமெரிக்க நாட்டின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்த விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் அந்த இரண்டு விமானங்களும், லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகம் அருகே கடலில் விழுந்து மூழ்கின.
துறைமுக நுழைவு பகுதி அமைந்துள்ள இடத்தில் இருந்து 2 மைல் தொலைவுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மூழ்கிய இந்த விமானத்தை மீட்கும் பணியில் மீட்புகுழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த விமானங்களில் பயணம் செய்தவர்களுள் யாரும் உயிருடன் உள்ளனரா? என்றும் விமானத்தில் எத்தனைபேர் பயணம் செய்தனர் என்பதை அறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.