போலந்தில் இரண்டு விமானங்கள் நடு வானில் மோதிக்கொண்ட விபத்தில், ஒரு விமானம் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.
போலந்து நாட்டின் தலைநகர் வர்சாவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ராடோம் நகரின் அருகில் இந்த சிறியரக விமானங்கள் மோதி விபத்துக்கு உள்ளாயின.
ஒவ்வொரு விமானத்திலும் தலா இரண்டு பேர் பயணம் செய்தனர். நடுவானில் மோதிய பின்னர் ஒரு விமானம் கீழே விழுந்த வேகத்தில் தீப்பிடித்தது.
அதில் இருந்த இரண்டு பேரும் உடல் கருகி இறந்தனர். மற்றொரு விமானம் விழுந்து சேதமடைந்தபோதும், அதில் இருந்த இரண்டு பேரும் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெற்கு போலந்தில் பாராசூட் வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் 11 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.