Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோஃபாவில் சயனம்: மலைப்பாம்பை லாவகமாக பிடித்த நபர்!

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (14:09 IST)
வெயில் காயும் கூடாரத்தில் போடப்பட்டிருந்த சோஃபாவில் மலைப்பாம்பு ஒன்று பிடிப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 
 
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டை பகுதியில் வசித்து வந்த குடும்பம் பாம்பு பிடிக்கும் அமைப்பு ஒன்றிற்கு அவசர அழைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது. 
 
அந்த அழைப்பில் எங்கள் வீட்டின் வெயில் காயும் கூடாரத்தில் போடப்பட்டுள்ள சோஃபா மீது மலைப்பாம்பு ஒன்று ஒய்யாரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. உடனடியாக வந்து அதை பிடித்து செல்லவும் என கேட்டுள்ளனர். 
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த சன்ஷைன் கோஷ்ட் எனும் பாம்பு பிடிக்கும் நபர் சோஃபா மீது சுருண்டு படுத்திருந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தார். 
 
அந்த பாம்பு குறித்து அவர் கூறியதாவது, இது ஒரு கார்பெட் மலைப்பாம்பு. இந்த வகை பாம்பு மனிதர்கள் அருகில் சென்றாலும் விலகிச்செல்லாது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் நாள் பள்ளிக்கு சென்று வந்தவுடன் பிளஸ் 2 மாணவி தற்கொலை.. காதல் விவகாரமா?

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments