Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து; 7 பேர் பலி! – பிலிப்பைன்ஸில் பயங்கரம்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (10:56 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் சென்றுக் கொண்டிருந்த சிறிய ரக கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பொலிலியா தீவிலிருந்து ரியல் நகரத்தில் உள்ள துறைமுகம் நோக்கி 135 பயணிகளை சுமந்து கொண்டு சிறிய ரக கப்பல் ஒன்று பயணித்துள்ளது. கடலில் சென்றுக் கொண்டிருந்தபோது படகு என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கப்பல் கடலிலேயே நின்ற நிலையில் கப்பலின் மேற் பகுதிகளிலும் தீப்பிடித்துள்ளது. தீயை கண்ட பலர் பயந்து கடலில் குதித்துள்ளனர். கப்பலில் வெளியேறிய கரும்புகையால் பலர் மூச்சுவிட முடியாமல் உள்ளே சிக்கியுள்ளனர்.

இந்த விபத்தில் கப்பலில் இருந்த 7 பேர் உடல் கருகி இறந்துள்ளனர். 4 பேரை காணவில்லை என தெரிய வந்துள்ளது. கப்பலில் இருந்த மீத மக்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments