Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயதானோருக்கு தடுப்பூசி போடக்கூடாதா? நார்வே சம்பவம் கூறுவது என்ன?

Webdunia
சனி, 16 ஜனவரி 2021 (15:38 IST)
நார்வேயில் இந்த தடுப்பூசி போட்டதில் 23 பேர் உயிரிழந்ததுள்ளனர். 

 
உருமாறிய கொரோனா வைரஸின் ஆதிக்கம் தற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் அதிகரித்து வருவதாலும் முந்தைய கொரோனாவின் தாக்கமும் அப்படியே இருப்பதாலும் கொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் பல நாடுகள் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.  
 
அமெரிக்காவை சேர்ந்த பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நெதர்லாந்தில் 47,000 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 
 
இதில் 100 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகள் பைசர் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக நார்வேயில் இந்த தடுப்பூசி போட்டதில் 23 பேர் உயிரிழந்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், பைசர் தடுப்பூசி போட்டு இறந்த அனைவருமே 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள், நார்வேயில் உள்ள நர்சிங் ஹோம்களில் வாழ்ந்த முதியவர்கள். இவர்கள் பைசர் தடுப்பூசியைப் பயன்படுத்தியபின் காய்ச்சல் போன்ற சில சிரமங்களை சந்தித்தபின் இறந்தனர் என நார்வே  நாட்டின் மருத்துவ நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments