Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்தில் இந்திய டி.வி., சேனல்களுக்கு தடையா? ஐகோர்ட்டில் மனுதாக்கல்..!

Siva
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (17:06 IST)
வங்கதேசத்தில் இந்திய டிவி சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வங்கதேச ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு சமீப காலமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இஸ்கான் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்தில் ஒளிபரப்பாகும் இந்திய டிவி சேனல்களில் இது குறித்த செய்திகள் பரபரப்பாக இயங்குகின்றன.
 
ஸ்டார் பிளஸ், ஸ்டார் ஜால்சா, ஜீ பங்களா, ரிபப்ளிக் பங்களா உள்ளிட்ட பல்வேறு சேனல்கள் இதை தொடர்புடைய செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதன் பேரில், இந்த சேனல்களை தடை செய்ய வேண்டும் என வங்கதேச ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த சேனல்கள் வன்முறையை தூண்டும் வகையில் செய்திகளை பரப்புவதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், வங்கதேசத்தில் இந்திய டிவி சேனல்களுக்கு தடை விதிக்கப்படுமா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும் என கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடுகளுக்கு ரூ.40, குழந்தைகளுக்கு ரூ.12.. மத்திய பிரதேச அரசின் நிதி ஒதுக்கீட்டால் சர்ச்சை..!

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. இந்தியா வருகிறார் புதின்.. டிரம்புக்கு எதிராக திட்டமா?

சென்னை விமான நிலையம் அருகே பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை.. ஐடி பொறியாளர் பரிதாப பலி!

5 மாதத்தில் ஒரு கோடி வாக்காளர்கள்.. தேர்தல் ஆணையம் மோசடி? - ராகுல்காந்தி ஆதரங்களுடன் பேட்டி!

தமிழகத்தின் மாநில கல்வி கொள்கை.. நாளை அறிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments