Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி விற்பனையை தடை செய்ய வேண்டும்: மனம் நொந்த மக்களின் கோரிக்கை

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (13:16 IST)
அமெரிக்காவில் நிகழ்ந்த தொடர் துப்பாக்கிச் சுடு சம்பவத்தால் அந்நாட்டில் வால்மார்ட், துப்பாக்கி விற்பனையை தடை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அன்று டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வால்மார்ட் சீலோ விஸ்டா மாலில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 20 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஒரு கிளப்பில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 9 பேர் பலியானார்கள்.

மேலும் அதற்கு அடுத்த நாள் ஞாயிறு அன்று, சிகாகோ நகரின் பூங்கா ஒன்றிற்கு காரில் வந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை சுட்டதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களினால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் மனவேதனைக்கு உள்ளாகினர்.

இதனை தொடர்ந்து துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு வரும் வால்மார்ட் கடைகளுக்கு ஏற்கனவே துப்பாக்கி விற்பனைக்கு சில கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையில், தற்போது பொது மக்கள், வால்மார்ட் நிறுவனம் துப்பாக்கி விற்பனையை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த கோரிக்கைக்கு இன்னும் அந்த நிறுவனம் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments