Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி முகத்தை மறைக்க பர்தா அணியக்கூடாதாம்... மீறினால் தண்டனை!

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (11:41 IST)
டென்மார்க்கில் இனி முகத்தை மறைக்கும் விதமாக திரையிடுவதோ அல்லது பர்தா அணிவதோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதத்துடன் கூடிய தண்டனை வழங்கபப்டும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
டென்மார்க் நாட்டு வழக்கப்படி இரண்டு பேர் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும்போது, ஒருவர் தனது முகத்தை மறைத்திருப்பது மற்றவரை அவமதிக்கும் செயலாகும்.
 
எனவே, டென்மார்க்கில் முகத்தை திரையிட்டு மறைக்கும் பழக்கத்திற்கு தடை விதிப்பதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையும் மரியாதையும் செலுத்துவதை உறுதி செய்ய முடியும் என கூறப்பட்டது. 
 
எனவே, இன்று இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது பர்தா தடை சட்டத்திற்கு, 75 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததால் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது. 
 
இந்த புதிய சட்டம் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments