Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பப்புவா நியூகினியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை

பப்புவா நியூகினியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை
, திங்கள், 30 மார்ச் 2015 (11:15 IST)
பப்புவா நியூகினியா தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது.


 

 
பப்புவா நியூகினியா தீவுக்கூட்டத்தை சேர்ந்த நியூ பிரிட்டனர் தீவு அருகே சுமார் 54 கி.மீ தொலைவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்த விபரம் தெரிவிக்கப்பட வில்லை 
 
இந்த நில நடுக்கம் காரணமாக, சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதாக பசிபி்க் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil