Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் திருமணம் செய்த மகளை தீ வைத்து எரித்து கொன்ற தாய்

Webdunia
வியாழன், 9 ஜூன் 2016 (16:16 IST)
பாகிஸ்தானில் லாகூரை சேர்ந்த ஒரு பெண் காதல் திருமணம் செய்ததால் அவரது தாய் அந்த பெண்ணை தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பாகிஸ்தானில் லாகூரை சேர்ந்தவர் பர்வீன். இவரது மகள் ஜீனத் அந்த பகுதியில் உள்ள ஹசன் என்பவரை காதலித்து வந்தார். வழக்கம் போல இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்க இருவரும் ஓடிச்சென்று காதல் திருமணம் செய்துகொண்டனர்.
 
இந்நிலையில் ஜீனத் தனது தாயை நேற்று சந்தித்து நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். தாய் பர்வீனும் தனது மகள் ஜீனத்தை மன்னித்து விட்டது போல் கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார்.
 
வீட்டிற்கு சென்ற ஜீனத்தை அவரது தாய் நன்றாக திட்டியுள்ளார். தனது மகனுடன் சேர்ந்து ஜீனத்தின் உடலில் பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளார் பர்வீன். இதனால் ஜீனத் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.
 
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் ஜீனத்தின் தாயை கைது செய்தனர். அவரது மகன் தலைமறைவாக உள்ளதால் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தாய், மகன் உள்ளிட்ட 4 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments