Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி தப்பித்த பாகிஸ்தானியர்கள்!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (12:23 IST)
இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி உக்ரைனிலிருந்து பாகிஸ்தான், துருக்கி நாட்டினரும் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.
 
இந்தியாவிலிருந்து உக்ரைனுக்கு படிக்க சென்ற மாணவர்கள் பலர் அங்கு சிக்கியுள்ளனர். மாணவர்கள் பலர் அண்டை நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து இந்திய அரசின் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் இயக்கப்படும் விமானங்கள் வழியாக இந்தியா திரும்பி வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி உக்ரைனிலிருந்து பாகிஸ்தான், துருக்கி நாட்டினரும் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனிலிருந்து எல்லை வழியாக அண்டை நாடுகளுக்கு செல்ல தேசிய கொடியை இந்தியர்கள் பயன்படுத்தினர். இந்தியர்களுடன் பாகிஸ்தான், துருக்கியை சேர்ந்தவர்களும் தேசிய கொடியை பயன்படுத்தி தப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments