Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் தூதர் கைது எதிரொலி : இந்திய தூதரக அதிகாரி வெளியேற பாகிஸ்தான் உத்தரவு

பாகிஸ்தான் தூதர் கைது எதிரொலி : இந்திய தூதரக அதிகாரி வெளியேற பாகிஸ்தான் உத்தரவு

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2016 (09:27 IST)
இந்தியாவை உளவு பார்த்த பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரி மீதி எடுத்த நடவடிக்கைக்கு பழிக்கு பழி வாங்க, இந்திய தூதரக அதிகாரி 48 மணி நேரத்தில் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும்  முகமத் அக்தர் என்பவர் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததை, மத்திய உளவுத்துறை சமீபத்தில் கண்டுபிடித்தது. இதனால் அவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் இந்தியாவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்தது.  
 
இந்நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் செயலாக, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரியான சுர்ஜீத் சிங் என்பவரை விரும்பத்தகாதவர் என்று அறிவித்து, 48 மணி நேரத்திற்குள் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments