Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாதத்துக்கு துணைபோனதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (18:19 IST)
பயங்கரவாதத்துக்கு துணைபோனது உண்மைதான் என பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.


 

 
பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருப்பதாக உலக நாடுகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு துணைபோனது உண்மைதான் என ஒப்புக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நாடு என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. அண்மையில் அமெரிக்கா கூட இதை தெரிவித்தது.  இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறியதாவது:-
 
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற அமைப்புகள் பாகிஸ்தான் மண்ணில் செயல்பட்டது உண்மைதான். ஆனால், அந்த அமைப்புகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதன் வாயிலாக பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக உள்ளது என்பதை சர்வதேச சமூகத்துக்கு காட்டுவோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடங்களில் மாஸ்க் அவசியம்.. கேரள முதல்வர் அறிவுறுத்தல்.. தமிழகத்தின் நிலை என்ன?

மனைவியிடம் அடிவாங்கியதை வெளியே தெரியாமலிருக்க என்ன செய்ய வேண்டும்: பிரெஞ்ச் பிரதமருக்கு டிரம்ப் அறிவுரை..!

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா.. 2வது முறையாக திருப்பி அனுப்பிய கவர்னர்..!

ஈபிஎஸ் - எல்.கே. சுதீஷ் திடீர் சந்திப்பு.. கூட்டணியா? ராஜ்யசபா தொகுதி பேச்சுவார்த்தையா?

சசிதரூரின் ஒரே ஒரு நாள் பேச்சு: பாகிஸ்தான் ஆதரவை திரும்ப பெற்ற கொலம்பியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments