Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரரைன் மீதான போருக்கு எதிராக ஓவியம்: சிறுமியின் தந்தைக்கு சிறைத்தண்டனை!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (21:07 IST)
உக்ரைன் மீது ரஷியாவின் போருக்கு எதிரான ஓவியம் வரைந்த சிறுமியின் தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவ போர் தொடுத்து  1 ஆண்டு நிறைவடைந்துள்ளது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு உலக நாடுகள் நேட்டோ கூட்டமைப்பும், உக்ரைன் நாட்டிற்கு நிதியுதவியும், ஆயுதத் தளவாடங்களும் அளித்து உதவி வருகின்றன. இதனால், உக்ரைன் நாடு, வல்லரசான ரஷியாவுக்கு எதிராகப் போரிட்டு, பதிலடி கொடுத்து வருகிறது.

ரஷியாவிலேயே, உக்ரைன் மீதான போருக்கு பலரும் எதிர்ப்புகள் கூறி வருகின்றனர். சமீபத்தில் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கடந்தாண்டு அலெக்சி மொஸ்கலியயோவ் என்ற நபரில் மகள் மரியா, தன் பள்ளியில் ஒரு ஓவிய வரைந்தார். அதில், உக்ரேன் நாட்டுக் கொடியுடன் ஒரு பெண்ணும், அவருடன் குழந்தையை நோக்கி, ரஷிய கொடி மற்றும் ஏவுகணைகள் வரைந்திருந்தார்.

ALSO READ: ஆஸ்கர் விழாவில் உரை நிகழ்த்த உக்ரைன் அதிபருக்கு அனுமதி மறுப்பு~!
 
இதுகுறித்து, பள்ளி தலைமையாசிரியர் போலீஸில் புகாரளித்தார். இதையடுத்து, ராணுவத்தை இழிவுபடுத்தியதாக, சிறுமி வரைந்த ஓவியத்திற்கு, அலெக்சி மீது வழக்குப் பதிவு செய்து, சிறுமியை சிறுவர்கள் காப்பக்கத்தில் வைத்தனர்.

இந்த வழக்கில் வீட்டுக்காவலில் இருந்த அலெக்சிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தப்பியோடிவிட்டார். தற்போது போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிறந்து 38 நாள் ஆன குழந்தை.. குளியல் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த தாய்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு வாரமாக மாறாமல் இருக்கும் வெள்ளி விலை..!

வாக்காளர் அடையாள அடையாள அட்டையில் பெண்ணின் புகைப்படத்திற்கு பதில் முதல்வரின் படம்.. அதிர்ச்சி தகவல்..!

மனைவியுடன் உல்லாசம்! உயிர் நண்பனின் உயிரை எடுத்த கணவன்! - கர்நாடகாவில் அதிர்ச்சி!

அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்வது மிக எளிது: ஈரான் தலைவர் கருத்துக்கு காமெடி பதில் சொன்ன டிரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments