Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்தில் இருந்து ஆன்லைன் மோசடி.. 7000 பேரை நாடு கடத்தும் அரசு..!

Siva
வியாழன், 27 பிப்ரவரி 2025 (18:32 IST)
தாய்லாந்து மற்றும் மியான்மர் எல்லையில் இருந்து உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்ட சுமார் 7,000 பேர் அவர்களின் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு என்ற காரணத்தால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆன்லைன் மோசடி செயல்களில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த நிலையில், தாய்லாந்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் 7,000 பேரை அவரவர் சொந்த நாட்டுக்கு நாடு கடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும், அனைத்து ஆன்லைன் மோசடி மையங்களின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து கொண்டே காதலிப்பது போல ஏமாற்றி பணம் பறிப்பது, சட்டவிரோத சூதாட்டங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் மோசடிகள் நடைபெற்று வருகின்றன.
 
இதில் பல பிரபலங்களும் சிக்கி, பெரியளவில் பணத்தை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடிக்கிற அடியில.. பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாவார்கள்! - பிரதமர் மோடி கர்ஜனை!

இவர் யாருங்க வரி போடுறதுக்கு..? ட்ரம்ப்பை முதுகில் குத்திய அமெரிக்க மாகாணங்கள்! - நீதிமன்றத்தில் வழக்கு

கும்பகோணத்தில் ’கருணாநிதி பல்கலை கழகம்’: சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

மத்திய அரசின் நடவடிக்கை.. இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி..!

பாகிஸ்தானில் திடீர் ஏவுகணை சோதனை.. இந்தியாவை பயமுறுத்தவா? எல்லையில் பதட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments