Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்தில் இருந்து ஆன்லைன் மோசடி.. 7000 பேரை நாடு கடத்தும் அரசு..!

Siva
வியாழன், 27 பிப்ரவரி 2025 (18:32 IST)
தாய்லாந்து மற்றும் மியான்மர் எல்லையில் இருந்து உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்ட சுமார் 7,000 பேர் அவர்களின் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு என்ற காரணத்தால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆன்லைன் மோசடி செயல்களில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த நிலையில், தாய்லாந்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் 7,000 பேரை அவரவர் சொந்த நாட்டுக்கு நாடு கடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும், அனைத்து ஆன்லைன் மோசடி மையங்களின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து கொண்டே காதலிப்பது போல ஏமாற்றி பணம் பறிப்பது, சட்டவிரோத சூதாட்டங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் மோசடிகள் நடைபெற்று வருகின்றன.
 
இதில் பல பிரபலங்களும் சிக்கி, பெரியளவில் பணத்தை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜி7 மாநாட்டிலிருந்து ட்ரம்ப் அவசர வெளியேற்றம்: மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

15 வயது சிறுவனை கடத்திய விவகாரம்: ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட்..!

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் பொதுச்செயலாளர் பதவியை ஈபிஎஸ் இழப்பார்: கே.என்.நேரு

முருகன் இருக்கும் இடமெல்லாம இந்துக்களுக்கு சொந்தம்.. அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி..!

நீலகிரியில் தொடர் கனமழை.. சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments