Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 2 மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்தலாம்: புதிய கட்டுப்பாடு

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (12:29 IST)
18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த அனுமதி என்று சீன அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.  
 
சீனாவின் சைபர்செல் அமைச்சகம் இது குறித்து தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட் ஃபோன்களில் இணைய சேவைகளை பெற முடியாது என்றும்  அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. 
 
அதேபோல் 8 முதல் 15 வயது உட்பட்ட சிறுவர்கள் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 40 நிமிடங்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவித்துள்ளது.  
 
ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு உகந்தவையாக கருதப்படும் செயலிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments