Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
, வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (15:22 IST)
அமெரிக்காவில் உள்ள கல்லூரி வளாகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்ஃனியா மாகாணத்தில் உள்ள சேக்கரமென்டேவில் உள்ள நகர கல்லூரி வளாகத்தில் தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 4 மணி அளவில் கல்லூரியில் உள்ள வாகன நிறுத்தம் இடத்தில் மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil