Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் கொரோனா பாதிப்பு: அமெரிக்கா, பிரேசிலைவிட இந்தியாவில் 3 மடங்கு

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (07:11 IST)
உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலைவிட இந்தியாவில் 3 மடங்கு அதிகமாக உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த 24 மணி நேரத்தில் .அமெரிக்காவில் 31,867 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும், பிரேசிலில் 32,719 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும், ஆனால் இந்தியாவில் இந்தியாவில் 91 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
மேலும் அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67,81,156 என்பதும், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 5,018,034 என்பதும், பிரேசிலில் கொரோனா மொத்த பாதிப்பு 4,382,263 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் உலக நாடுகளில் இந்தியாவில்தான் ஒரே நாளில் கொரோனா மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது. ஆனால் அமெரிக்கா, பிரேசில், நாடுகளை ஒப்பிடும்போது மொத்த கொரொனா பலி இந்தியாவில் குறைவு
 
இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 82,091 என்பதும், அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,99,947 என்பதும், பிரேசிலில் கொரோனா மரணங்கள் 1,33,119 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரே நாளில் 82,844 என்பதும், உலக நாடுகளில் இந்தியாவில்தான் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைந்து வருகின்றனர் என்பதும் ஒரு பாசிட்டிவ் செய்தி ஆகும்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments