Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த மறுநாளே கொரோனா வைரஸ்: சீனாவில் பெரும் பரபரப்பு

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (20:30 IST)
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வெகுவாக பரவி அந்நாட்டு மக்களை கொன்று வருகிறது. சீனா மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் இந்தியா உள்பட வெளிநாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்பதால் உலக நாடுகளே இந்த கொரோனா வைரசால் அச்சத்தில் உள்ளன
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் முதல் முதலாக பரவ ஆரம்பித்த சீனாவின் வூகான் மாகாணத்தில் நேற்று பிறந்த குழந்தை ஒன்றுக்கு இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 
 
அந்த குழந்தையின் தாய் கர்ப்பமாக இருக்கும் போதே கொரோனா வைரஸ் அவருக்கு தாக்கியதாகவும் இதனையடுத்து அந்த வைரஸ் குழந்தைக்கும் பரவியதாகவும் கூறப்படுகிறது இதனை அடுத்து குழந்தைக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது 
 
பிறந்த மறுநாளே கொரோனா வைரசுக்கு ஒரு பச்சிளங்குழந்தை தாக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments