Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 நூற்றாண்டுகளில் வாழ்ந்த, உலகின் மிக வயதான பெண் மரணம்

3 நூற்றாண்டுகளில் வாழ்ந்த, உலகின் மிக வயதான பெண் மரணம்
, புதன், 1 ஏப்ரல் 2015 (14:16 IST)
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உலகின் மிக வயதான பெண் என்று கருதப்பட்ட  மிசாயோ ஒகாவா தனது 117 ஆவது வயதில் மரணமடைந்தார்.


 

 
ஜப்பானில் உள்ள ஒசாகாவைச் சேர்ந்தவர் மிசாயோ ஒகாவா. இவர் உலகிலேயே மிக வயதான பெண் என்ற பெருமை பெற்றவர். இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
 
கடந்த மாதம் இவர் தனது 117 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த அவர் ஒசாகாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
அவருக்கு 3 பிள்ளைகள், 4 பேரப்பிள்ளைகள், 6 கொள்ளு பேரர்கள் உள்ளனர். 1898 ஆம் ஆண்டு பிறந்த இவர் 3 நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil