Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுத சோதனை கூடம் அழிப்பு: பார்வையிட கிம் அழைப்பு!

Webdunia
வியாழன், 24 மே 2018 (11:41 IST)
வடகொரிய அதிபர் கிம் அணு ஆயுத கூடம் பிரிக்கப்படுவதை பார்வையிட சர்வதேச நிரூபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். முதலில் தென் கொரிய நிரூபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது அவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
தென் கொரியாவில் நடந்த குளிர்கால் ஒலிம்பிக் தொடருக்கு பின்னர் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னிடம் மாற்றங்கள் காணப்படுகிறது. இதன் விளைவாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் ஜூன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 
அணு ஆயுத சோதனையை தொடர்ந்து நடத்துவதில்லை என்று கிம் உறுதி அளித்துள்ளார். அதை உறுதிப்படுத்தும் விதமாக பங்கி-ரி பகுதியில் உள்ள அணு ஆயுத சோதனை கூடத்தைப் பிரித்து வருகிறோம் என்று வடகொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
அணு ஆயுத சோதனை கூடம் பிரிக்கப்படுவதைப் பார்வையிட சர்வதேச ஊடகங்களை சேர்ந்த நிருபர்கள் பலருக்கு வடகொரியா அனுமதி அளித்தது. முதலில் தென் கொரிய நிருபர்களுக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. தற்போது அவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments