Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிப்போரில் 40 ஆயிரம் பேர் அல்ல, 7000 பேரே கொல்லப்பட்டனர் - மேல்ஸ்வெல்

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2015 (17:29 IST)
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை என்றும், 7000க்கும் அதிகமானோரே கொல்லப்பட்டிருக்கலாம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மேக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கருத்து தெரிவித்துள்ள அவர், ”2011ஆம் ஆண்டு ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டது போன்று, இலங்கை இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை.
 
பெரும்பாலும், 7000க்கும் அதிகமானோர்தான் கொல்லப்பட்டிருக்கலாம். போர்க்காலத்தில் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பாக எமது ஆணைக்குழு இதுவரை துல்லியமான எண்ணிக்கையைக் கண்டறியவில்லை. எனினும், ஐ.நா நிபணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போன்று நிச்சயமாக 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை.
 
அந்த அறிக்கையில் கூட, உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக உறுதியாக கூறப்படவில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது.
 
எனினும், எமது ஆணைக்குழு இதபற்றிய துல்லியமான எண்ணிக்கை பற்றிய முடிவு எதற்கும் வரவில்லை. ஆனால் 40 ஆயிரம் என்பது மிகையான கணிப்பு” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments